Posts

வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்

கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்ற து. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார். கணக்கதிகாரப் பாடல் : 50 “விட்ட மதனை விரைவா யிரட்டித்து மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில் ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும் தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “ விளக்கம்: விட்டம்தனை விரைவா யிரட்டித்து = விட்டத்தின் இரு மடங்கு = 2r + 2r = 4r (விட்டம் = 2r ) மட்டு நாண் மாதவனில் மாறியே = 4 ஆல் பெருக்கு எட்டதனில் ஏற்றியே = 8 ஆல் பெருக்கு செப்பியடி = 20 ஆல் வகு வட்டத்தின் சுற்றளவு = ( 4r x 4 x 8 ) / 20 = 32 / 5 r = 2 ( 16/5) r = 2 π r இங்கு π = 16 / 5 = 3.2 ( இது ஓரளவுக்குத் துல்லியமான தோராயமே ) இன்று நாம் பயன்படுத்தும் வட்டத்தின் சுற்றளவு = 2 π r என்ற சூத்திரத்தை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ளனர் என்று அறியும் போது உண்மையில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். x

தென்னாட்டுப் போர்க்களங்கள்

புறநானூற்று வீரம் இலக்கிய வீரம் மட்டுமன்று. வாழ்க்கையில் தழைத்து இலக்கியத்தில் கனிந்த வீரமே! மதுரைக் காஞ்சி மூலம் அதுவே தலையாலங் கானத்துப் பெறும் போர் வெற்றியாகி, இலக்கியத்திலும் வாழ்விலும் மலரக் காண்கிறோம். இப்புகழை இமயம்வரை கொண்டு செல்கிறது, சிலம்புச் செல்வம். இதனை அடுத்து முத்தொள்ளாயிரத்தில் தமிழில் முன்னோ பின்னோ என்றுமில்லாத வகையில் அதுபின்னும் இன்னிலா வொளிபூத்து முறுவலிக்கக் காண்கிறோம். சோழப் பேரரசர் காலத்தில் அது இலக்கியத்தில் மூவருலாவாகவும் கலிங்கத்துப் பரணியாகவும் புதுமுகையவிழக் காண்கிறோம். இவை இலக்கிய முகைகள் மட்டுமல்ல, வங்கம், கலிங்கம், கடாரம் ஆகிய நாடுகள் அப்புது வீர காவியங்களால் அதிர்வுற்றன. அவற்றிலிருந்து எழுந்த வீர அலைகள் அராபிக் கடலில் மாலத்தீவுகள் என்னும் பழந் தீவுகள் பன்னீராயிரத்தையும், வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் என்னும் மாநக்கவாரத் தீவுகளையும் அலைக்கழித்தன. சோழப் பேரரசைவிட எல்லையில் குறைந்தாலும் வீர்த்தில் குறைந்ததல்ல, பிற்காலப் பாண்டியப் பேரரசு. மேலும் செல்வ நிலையில் அது சோழப் பேரரசையும் விஞ்சியிருந்தது என்பதை வெளிநாட்டார் குறிப்புகளே தெரிவிக்கின்றன....

ஒற்றைக்கல்லில் குடையப்பட்ட உலகின் மிகப்பெரிய கோயில்!

Image
கோயில்களில் எல்லாம் ஒற்றைக்கல்லினால் செய்யப்பட்ட மிகப்பெரிய சிற்பங்களை நாம் காணலாம். ஆனால், இவற்றைக்காட்டிலும் ஒரே பாறையில் குடையப்பட்ட மிகப்பெரிய கோயில் ஒன்றே மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. அதிகம் வெளியுலகிற்கு தெரியாத, பிரபலமாகாத அக்கட்டிடக்கலை உன்னதத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரிலிருந்து 29கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் எல்லோரா குகையினுள் இருக்கும் ‘கைலாசா கோயில்’ தான் உலகில் ஒற்றைக்கல்லில் குடையப்பட்ட மிகப்பெரிய கோயிலாகும். இந்த எல்லோரா சிற்பங்கள் ராஸ்டிரகூடர் மற்றும் யாதவ வம்சத்தினரால் கட்டப்பட்டதாகும். யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய குடைவரை கோயில் கட்டிடக்கலையின் உச்சமாக எல்லோரா குகைகள் திகழ்கின்றன என்றே சொல்லலாம். சரணாந்த்ரி மலையில் மொத்தம் 34 எல்லோரா குகை குடைவரை கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் 17ஹிந்து கோயில்களும், 12பௌத்த கோயில்களும், 5 ஜைன கோயில்களும் இருக்கின்றன. அருகருகே வெவ்வேறு மத கோயில்கள் இருப்பது அக்காலத்தில் நிலவிய மதநல்லிணக்கத...

பழந்தமிழ் போர்க்கருவிகள்:

1) வளைவிற்பொறி 2) கருவிரலூகம் 3) கல்லுமிழ் கவண் 4) கல்லிடுகூடை 5) இடங்கணி 6) தூண்டில் 7) ஆண்டலையடுப்பு   கவை 9) கழு 10) புதை 11) அயவித்துலாம் 12) கைப்பெயர் ஊசி 13) எரிசிரல் 14) பன்றி 15) பனை 16) எழு 17) மழு 18) சீப்பு 19) கணையம் 20) சதக்களி 21) தள்ளிவெட்டி22) களிற்றுப்பொறி 23) விழுங்கும் பாம்பு 24) கழுகுப்பொறி 25)புலிப்பொறி 26) குடப்பாம்பு 27) சகடப்பொறி 28) தகர்ப்பொறி 29) அரிநூற்பொறி 30) குருவித்தலை 31) பிண்டிபாலம் 32) தோமரம் 33) நாராசம் 34) சுழல்படை  35) சிறுசவளம் 36) பெருஞ்சவளம் 37) தாமணி 38) முசுண்டி 39) முசலம் 40) வளரி வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரு வியப்பை தருவதாக அமைந்துள்ளது. தமிழர்தம் மரபுசார் போர்க்கருவிகள - முனைவர். மு.பழனியப்பன் தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது, முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடு...

யாளி - ஒரு புரியாத புதிர் !

Image
தென்னிந்தியக் கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம். சிங்க முகமும் அதனுடன் யானையி ன் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப்பெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வர...

கல்லணை

Image
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இ ரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் . நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை. ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்த...

நேத்தாஜி கூறிய தமிழ் இனத்தின் வீரம்.

இதை படித்த பிறகு தமிழன் என்ற பெருமையில் உடம்பு சிலிர்த்து போகும். அதிக நீளம் என கருதி நம் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பயணித்து விடாதீர்கள். தமிழ் இனத்தின் வீரம் பற்றி அறிய நாம் மன்னர் காலத்திற்கு பின்னோக ்கி பயணிக்க வேண்டியதில்லை. சமகாலத்தில் வாழ்ந்த நம் தமிழ் இன மக்கள் பங்கெடுத்த நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவம் ஒரு சான்றே போதுமானது... இந்திய விடுதலைக்காக நேதாஜி மலேயாவிலும் பர்மாவிலும் செயல்பட்டார். அவருக்கு உதவியாக அங்கிருந்த தமிழ் இன மக்கள் முழுமையாக செயல்பட்டனர். "இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்" என்று நேதாஜி அறைக்கூவல் விடுத்தார். அந்த அறைக்கூவல் நம் வீர இனத்தின் காதுகளில் விழ, தமிழ்நாட்டிலும் மலாயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழின மக்கள் இந்திய தேசிய ராணுவத்தில் உயிரை பொருட்படுத்தாமல் இணைந்தனர். பல உயர் பதவிகளிலும் இருந்தனர். அரக்கான் போரில் பல தமிழர்கள் வீர மரணம் அடைந்தனர். மடிந்த ஒவ்வொரு தமிழனும் தான் உயிர் போகும்வரை போராடியதாக நேதாஜியிடம் சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் உயிர் பிரியும் வலியோடு கூறிவிட்டு வீரமர...