Posts

Showing posts from April, 2018

உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்

1600 ஆண்டுகள் பழமையான இந்த இரும்புத்தூண் இந்தியர்களின் திறமைக்கு அறிவியல் தொழில் நுட்பத்திற்கு கட்டியம் கூறுகிறது.  இந்த இரும்புத்தூண் சுமார் 24 அடி (7.2 மீட்டர்) உயரம் இதனுடைய எடை ஆறு டன் இதனுடைய அடிப்பாகம் நிலத்தினுள் ஒரு மீட்டர் இருக்கும்ங்கராங்க. இத்தூணில் சமஸ்கிருத வாசகங்கள் பிராமி எழுத்துகளை கொண்டு பொறிக்கப்பட்டு உள்ளது.  குத்புதீன் டெல்லியில் கட்டிய முதல் மசூதி குவ்வாத்-அல்-இஸ்லாம் சுமார் 23 இந்து, ஜைனக் கோயில்களை இடித்து உடைந்த பகுதிகளால் கட்டப்பட்டதே. இந்த பகுதியில் தான் இந்த இரும்புத்தூண் கம்பீரமாய் நிற்கிறது. இந்த இரும்புத்தூணின் வரலாற்றை இன்னும் பின்னால போய் பார்த்தோம்னா இது இரண்டாம் சந்திரகுப்த விக்கிரமாதித்தியரால் கி.பி.402 ல் செய்யப்பட்டது. இது அப்போதைய உதய கிரியின் (Vishnupadagiri) விஷ்ணு கோயிலின் எதிரில் இருந்த கொடிமரம். தூணின் உச்சியில் கருடன் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னாளில், அதாவது 10ம் நூறாண்டில் தற்போது இருக்கும் பகுதிக்கு ராஜபுத்திர அரசர் ஆனங்பாலினால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. இந்த இடத்திலும் விஷ்ணு கோயிலின் முன்னால் கம்பீரமான கொடிமரமாக இருந்தத...

உலகின் 15 பெரிய கோயில்கள்

Image
1 அங்கோர்வாட் விஷ்ணுகோயில், கம்போடியா * கி.பி 1113 – 1150ல் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. 162.6 ஹெக்டேர் பரப்பு கொண்டது.  * கம்போடியா நாட்டின் சின்னமாக உள்ளது. * பள்ளிகொண்டநிலையில், இங்கு விஷ்ணு இருக்கிறார்.  2 ரங்கநாதர்கோயில், ஸ்ரீரங்கம் * 108 திவ்ய தேசங்களில் முதல் தலம். * 156 ஏக்கர் பரப்பு கொண்டது. * தென்னிந்தியாவின் பெரிய (239 அடி) ராஜ கோபுரம் இங்குள்ளது * 21 கோபுரங்களும், 7 மதில் சுவர்களும் உள்ளன. 3 அக்‌ஷர்தம் கோயில், டில்லி  * மகான் சுவாமிநாராயணருக்காக கட்டப்பட்டது.  * 23 ஏக்கர் பரப்பு கொண்டது. * கருவறையில் 7 அடி உயர தங்கச்சிலை உள்ளது.  * ஆராய்ச்சி மையம், கண்காட்சி அரங்கம், 15 ஏக்கர் பூங்கா உள்ளன.  4 நடராஜர் கோயில், சிதம்பரம் * பூலோக கைலாயமான இதுவே முதல் சிவத்தலமாகும். * 40 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு சிவனின் ஐந்து சபைகள் உள்ளன. * கனக சபையின் பொற்கூரை பராந்தக சோழனால் கட்டப்பட்டது. * கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்கள் இடம் பெற்றுள் ளன. 5 பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் * கி.பி.11ம் ¡Øறாண்டில் முதலாம் ராஜராஜ சோழன் கட்டியது. * ...

உலகத்தில் வாழும் மிக கொடிய விஷமுள்ள உயிரினங்கள்

Image
கூம்பு நத்தை  நம் உலகம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தாத காரணங்களில் இதையும் ஒன்றாக கூறலாம். பின்ன என்னங்க, நத்தை போன்ற ஒரு சின்ன உயிரினத்தால் நம் உயிருக்கு ஆபத்து என்றால் என்ன சொல்வது. நம்பும்படியாக இல்லையா? ஆனால் உண்மை, இந்த உலகத்தில் வாழும் விஷத்தன்மை உள்ள உயிரனங்களில் ஒன்றாக விளங்குகிறது கூம்பு நத்தை. வெதுவெதுப்பான உப்பு தண்ணீர் பகுதியில் பொதுவாக இவ்வகையான நத்தையை காணலாம். அதன் விஷத்தின் ஒரு சொட்டு 15-20 மனிதர்களின் உயிரை பறிக்கும் சக்தியை கொண்டுள்ளது. இன்லேன்ட் டைபன் பாம்புகள்   ஒரு விஷயத்திற்கு இவை பெயர் பெற்றது - அதன் விஷம். உலகத்தில் உள்ள கொடிய விஷமுள்ள உயிரனங்களில் பல பாம்புகளின் பெயர்களை கூறலாம். அப்படிப்பட்ட பல பாம்பு வகைகளில் இன்லேன்ட் டைபன் வகைகள் தான் மிகவும் கொடிய விஷத்தை கொண்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த ந்யூரோ நச்சினால் 20 நிமிடங்களில் மரணம் ஏற்பட்டு விடும். தீவிர வலி, தசை வாதம் மற்றும் கோமா போன்ற நிலைகள் கூட இந்த பாம்பு கடியால் உண்டாகும். 50 மனிதர்களை கொள்ளும் அளவிலான விஷத்தை கொண்டுள்ளது இவ்வகையான பாம்பு. வெறும் 15 நிமிடங்களில் இதன் விஷம் இரத்த திசுக்களை இற...

உலகத்தில் வாழும் கொடிய விஷமுள்ள உயிரினங்கள்

Image
பஃப்பர் மீன் நம் பட்டியலில் குறைந்த நச்சுத்தன்மை உள்ள உயிரனமாக 8-ஆவது இடத்தில் உள்ள பஃப்பர் மீன் உள்ளது. சக்திவாய்ந்த விஷத்திற்கு பெயர் பெற்றது இந்த மீன். இருப்பினும் ஜப்பான் மற்றும் தென் கொரியா நாட்டில் இந்த மீனை உணவாக பயன்படுத்தி வருகின்றனர். ஜப்பானில் இதை ஃபுகு என்றும், தென் கொரியாவில் இதை போக்-ஊ என்றும் அழைக்கின்றனர். இதன் சருமத்திலும் சில உறுப்புகளிலும் சக்தி வாய்ந்த விஷத்தை கொண்டுள்ளது இந்த மீன். இது உணர்வின்மையை உண்டாக்கும். மேலும் நாக்கு மற்றும் தசைகளின் செயல்பாட்டை செயலிழக்க செய்யும். இதனால் குணப்படுத்த முடியாத வாதம் ஏற்படும். பிரேசிலியன் சிலந்தி   இதனை "வாண்டரிங் (திரியும்) சிலந்தி" என பொதுவாக அழைப்பார்கள். உலகத்தில் உள்ள சிலந்திகளிலேயே மிகுந்த நச்சுத்தன்மை உள்ள சிலந்தியாக இது பார்க்கப்படுகிறது. இதனால் மனிதர்களுக்கு பல வகையான ஆபத்து உண்டாகலாம். மற்ற சிலந்திகளின் விஷத்துடன் ஒப்பிடுகையில், இதன் சக்தி வாய்ந்த விஷம் மனிதர்களின் உயிரையே பறித்து விடும். சிலந்தி போன்ற சிறிய உயிரினத்தில் இவ்வளவு விஷமா என்பதே நமக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். இந்த செய்தி இன்னும் ஆச...

இன்னும் சில வருடங்களில் அழிந்து விடும் அதிசயங்கள்

Image
    மிக பெரிய நகரங்கள், மிக பெரிய காடுகள் என எதுவுமே இந்த உலகத்தில் கடைசி வரை நிரந்தரமாக இருக்க போவதில்லை. அவைகள் இயற்கை சீற்றங்களாலோ, மனிதனின் செயல்களினாலோ, முற்றிலுமாக அழிய கூடிய சில இடங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.        மாலத்தீவு : பூமி அதிகமாக வெப்பம் அடைந்து கொண்டு வருவதால், பனிப்பாறைகள் வேகமாக உருகிக் கொண்டு வருகிறது. இதனால் உயரும் கடல் மட்டமானது, நில பரப்பில் இருக்கும் நகரங்கள் கடலுக்கு அடியில் கொண்டு செல்ல உள்ளதும் நம் எல்லோருக்கும் தெரியும். இதனால் அதிகம் பாதிக்கபட கூடிய இடங்களில் மிக முக்கியமான இடம் தான் இந்த மாலத்தீவு. சுற்றுலாவுக்கு பெயர் போன இந்த மாலத்தீவுவை சுற்றி 1200 சிறிய தீவுகளும், 4 லட்சம் மக்களும் வசிக்கின்றன. இங்குள்ள தீவுகள் கடல் மட்டத்தில் இருந்து, வெறும் 1.8 மீட்டர் உயரத்தில் தான் உள்ளது. இதன் படி பார்த்தால் 2100ம் ஆண்டுக்குள் மாலத்தீவு உள்பட அதை சுற்றி உள்ள தீவுகள் அனைத்தும் மூழ்க கூடும் என அஞ்சப்படுகிறது.        SAN FRANCISCO...

உண்மையில் விமானத்தை கண்டுபிடித்தது யார் தெரியுமா?

Image
அறிவியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது இருப்பது தான் விமானம். இன்றைய உலகம் சுருங்கி போனதற்கு முக்கியமான காரணங்களில் விமானமும் ஓன்று. வானில் பறக்கும் பறவையை பார்த்து நாம் ஏன் அது போல் ஒரு சாதனத்தை உருவாக்கமுடியாது என்ற கேள்வி உதித்ததின் விளைவாக 17 டிசம்பர் 1903ம் ஆண்டு ஆர்வில் ரைட் (ORVILLE WRIGHT) மற்றும் வில்பர் ரைட் (WILBUR WRIGHT) என்ற இரட்டை சகோதர்கள் விமானத்தை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தினார்.        ஆனால் விமானத்தை ரைட் சகோதர்களுக்கு முன்னரே, இன்னொருவர் உருவாக்கிவிட்டார் என்று வரலாற்று சான்றுகள் இன்றளவும் கூறுகின்றது. நியூசிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் பியர்ஸ் (RECHARD PEARSE) என்பவர், 31 மார்ச் 1903ம் ஆண்டு முதலாவது விமானத்தை பரிசோதித்துள்ளார். ஆனால் அவரிடம் அந்த சமயத்தில் அதற்கான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், மீண்டும் விமானத்தில் மாற்றங்கள் செய்து 11 மே 1903ம் ஆண்டு பலர் முன்னிலையில் விமானத்தை இயக்கி காட்டியுள்ளார். ஆனால் தரை இறக்கும் போது விமானம் ...

உண்மை என நம்பிக்கொண்டிருக்கும் சில பொய்யான வரலாறு

Image
நாம் பள்ளிகளில் படித்த அறிவியல் மற்றும் சில விஞ்ஞான வரலாறுகள் பெரும்பாலும் மிகைப்படுத்தி எழுதப்பட்டது தான். அதுதான் உண்மை என்று நாம் இன்றும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். அப்படி மாற்றி எழுதப்பட்டுள்ள ஆச்சரியமான தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.   ANCIENT BATTERY  : கிட்டத்தட்ட 18ம் நூற்றாண்டு வரையிலும், BATTERY யை பற்றிய எந்த ஒரு ஆய்வுகளும் இந்த உலகில் நடத்தப்பட வில்லை என்கிறது வரலாறு. ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  அகத்தியர் முனிவர்   தனது குறிப்புகளில் துத்த நாகம், செப்பு மற்றும் களிமண் கொண்டு மின் காலம் தயாரித்தற்கான செயல்முறைகளை எழுதி வைத்துள்ளார். இந்த குறிப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டேவிட் மற்றும் மைக்கேல் என்பவர்கள் அகத்தியரின் செயல்முறையை தொலைக்காட்சி மூலம் செயல்படுத்தி  1 VOLT  வ ரை மின்சாரம் தரியாரித்துள்ளனர். இதே போல பல பேட்டரிகளை ஒன்றாக இணைத்தால் பல மடங்கு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பதையும் தெரிவித்துள்ளனர்.   CHINA WALL  : சீனப்பெருஞ்சுவர் என்றதும் நம் நினைவுக்கு வருவது உலகின் மிக நீளமான சுவர். உ...

இந்தியாவின் RAW அமைப்பை பற்றி தகவல்கள்

Image
பங்களாதேஸ் போர், கராச்சி குண்டு வெடிப்பு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு, காஸ்மீரின் கிளர்ச்சி உள்ளிட்ட பாகிஸ்தான் எதிர்கொள்ளும் எந்த ஒரு பிரச்சனைக்கும் காரணம் யார் என்று கேட்டால் இந்தியன்  RAW  என்று பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் சொல்வார்கள். ஆனால் இந்தியாவில் வசிப்பவர்களிடம் RAW பற்றிய விவரம் கேட்டால், அதை பற்றி அவர்களால் எதுவும் சொல்ல முடியாது. மும்பையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான   ISI  பற்றிய பல தகவல்களை தெரிந்து வைத்திருக்கும் நமக்கு, RAW பற்றிய தகவல்களை தெரிவதில்லை. இப்பொழுது நாம் தர்மத்தை காப்பவன் காக்கப்படுவான் என்ற குறிக்கோளுடன் இந்தியாவின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் இந்தியாவின் உளவு அமைப்பான RAW பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.     1962  ம் ஆண்டு   இந்திய சீனப் போர்  மற்றும்   1965  ம் ஆண்டு,   இந்தியா பாகிஸ்தான் போர்  ஆகியவற்றிற்கும்   IB  எனப்படும்   INVESTIGATION BUREAU  பொறுப்பில் இருந்த புலனாய்வு சேவர்களின் தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கென பிரத்தியேகமான புலனாய்வை அமைப்பை...

உலகிலேயே 6௦௦௦ வருடம் பழைமையான மாநகரம்

Image
உலகில்   இன்று   எத்தனையோ   மாநகரங்கள்   இருந்தாலும்   கூட ,  அவை   அனைத்தும்   இன்னும்   ஆயிரம் வருடங்களுக்கு   இருக்குமா   என்று   தெரியாது .  அதே   போல்   பல   ஆயிரம்   ஆண்டுகளுக்கு   முன்னாள்   இருந்த மாநகரங்கள்   எல்லாமே   இன்றும்   இயங்கி   கொண்டு   இருக்கிறதா   என்றால்   சந்தேகம்தான் .  உலகத்தில் உள்ள   ரொம்ப   பழமையான   மாநகரங்களான   கிரேக்கம் ,  ஏதென்ஸ் ,  ரோம்   போன்றவற்றை   ஆய்வு செய்யும் போது .  அந்த   மாநகரங்கள்   எல்லாமே   ஒரு   குறிப்பிட்ட  கால கட்டத்தில்   புதையுண்டு   அதற்கு   மேல் இன்னொரு   நகரம்   உருவாக்கப்பட்டுள்ளது .    ஆனால்   எத்தனையோ   கலாச்சார   மாற்றங்களையும் ,  இயற்கையின்   பேராபத்துகளையும்   கடந்து கிட்டத்தட்ட   6  ஆயிரம்   வருடம்   ஒரு   மாநகரம்   இன்றும்...

தமிழர்களின் சாதனை

Image
உலகிலேயே மிகப்பெரிய வழிபாட்டுத்தலம் கம்போடிய நாட்டில் உள்ளது. அங்கோர்வாட் என்ற இந்த ஆலயம் தமிழனால் கட்டப்பட்டது. இது தமிழர்களின் கலைத் திறமையை உலகுக்கு எடுத்துக் காட்டும் அற்புத கலைச் சின்னம். இரண்டாம் சூரியவர்மன் இந்த இடத்தைக் கைப்பற்றியவுடன் இந்த பிரமாண்ட கோவிலை கட்டினான். இந்த இடம் தான் அவனது தலை நகரமாக செயல்பட்டது. இந்தக் கோவிலை ஒரு கலைப் பொக்கிஷம் என்று கூறலாம். திரும்பிய திசையெல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இதன் ஒரு பக்கச் சுற்று சுவரே 3.6 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. அப்படி என்றால் இதன் பிரமாண்டத்தை கற்பனை செய்து பாருங்கள். இந்த கோவிலின் ஆரம்பக்கட்ட வடிவமைப்பு பணிகள் 12-ம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கின. 27 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட சூரியவர்மன் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் கோவிலின் வேலைகள் நிறைவடைந்தன. இதன் பின்னர் ஆறாம் ஜெயவர்மன் ஆட்சிக்கு வந்தான். அதுவரை இந்துக் கோவிலாக இருந்த அங்கோர்வாட் ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாக புத்த வழிபாட்டுத் தளமாக மாற்றப்பட்டது. இன்று இருக்கக்கூடிய நவீன தொழில் நுட்பங்களை உபயோகித்து கட்டினால் கூட இதுபோன்ற ஒரு கட்டிடம் கட்ட...

ஹிட்லரேயே மன்னிப்பு கோர வைத்த தமிழன்

Image
 ஹிட்லர்   என்று   சொன்னால்   தொட்டில்   குழந்தையும்   வாய்   மூடும் . அப்படிப்பட்ட   ஹிட்லரையே   வாய்   அடைக்க   செய்து   மன்னிப்பு   கோரா வைத்தவன்   ஒரு   தமிழன்   என்பது   எத்தனை   பேருக்கு   தெரியும் .   செண்பகராமன்   சில   தலைவர்களால்   மறைக்கப்பட்டும் ,  நம்மை  போன்றவர்களால்   மறக்கப்பட்டும்   வரலாற்றில்   வாழ்ந்து   கொண்டு இருக்கும்   ஒரு   வீரத்   தமிழன் .  தமிழகத்தை   பிறப்பிடமாக   கொண்ட செண்பக   ராமன்   15  வயதிலேயே   சுதந்திர   போராட்டத்தில்   ஈடுபட்டதால் பல்வேறு   இன்னல்களுக்கு   ஆளானார் .  இவர்   தலைமறைவாக வாழவேண்டிய   சூழ்நிலையில்   கடல்   கடந்து   ஜெர்மனிக்கு   போனார் . அங்கேயே   பயின்று   பொருளாதாரத்தில்   டாக்டர்   பட்டமும்   பெற்றார் . செண்பக   ராமனின்   அறிவையும்   ஆற்றலைய...