ஹிட்லரேயே மன்னிப்பு கோர வைத்த தமிழன்



 ஹிட்லர் என்று சொன்னால் தொட்டில் குழந்தையும் வாய் மூடும்.அப்படிப்பட்ட ஹிட்லரையே வாய் அடைக்க செய்து மன்னிப்பு கோராவைத்தவன் ஒரு தமிழன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்
 செண்பகராமன் சில தலைவர்களால் மறைக்கப்பட்டும்நம்மை போன்றவர்களால் மறக்கப்பட்டும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டுஇருக்கும் ஒரு வீரத் தமிழன்தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டசெண்பக ராமன் 15 வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால்பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்இவர் தலைமறைவாகவாழவேண்டிய சூழ்நிலையில் கடல் கடந்து ஜெர்மனிக்கு போனார்.அங்கேயே பயின்று பொருளாதாரத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார்.செண்பக ராமனின் அறிவையும் ஆற்றலையும் கண்ட கெய்சர் மன்னன்தன்னுடைய அந்தரங்க நண்பராக மாற்றிக் கொண்டார்.

   ஒருமுறை செண்பக ராமனை ஒரு மாநாட்டில் சந்தித்தார் நேதாஜி.இவருடனான உரையாடலில் நேதாஜிக்கு கிடைத்ததுதான் இந்தியசுதந்திர போராட்டத்தை வழிநடத்தும் தாரக மந்திரமான ஜெய்ஹிந்த்.மேலும் இந்தியா மீதான உலகநாடுகளின் பார்வையை தனதுஉணர்ச்சிகரமான சொற்பொழிவுகளால் உடைத்தெறிந்தார்செண்பகராமன்ஒருமுறை ஹிட்லருடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டார் செண்பக ராமன்அப்பொழுது இந்தியர்களுக்கு சுதந்திரம்அடையும் தகுதி இல்லை  என ஏளனமாய் உரைத்தார் ஹிட்லர்கோபம்கொண்ட செண்பக ராமன் ஹிட்லரை கடிந்ததோடு இந்தியாவின்பெருமைகளையும்அதன் ஒப்பற்ற தலைவர்களையும் பற்றி கூறிஹிட்லரையே வாயடைக்க செய்தார்.

    உலகத்தையே அச்சம் கொள்ள வைக்கும் ஹிட்லரை கண்டித்தவிதத்தை பார்த்து சுற்றி இருந்தோர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.சொல்லாற்றலையும் உறுதியையும் கண்டு ஆடி போன ஹிட்லர்.அவரிடம் மன்னிப்பு கோரினார்இருந்தாலும் சீற்றம் குறையாதசெண்பக ராமன்எழுத்து வடிவ மன்னிப்பு கேட்டார்ஹிட்லர்அதனையும் கொடுத்தார்இந்த நிகழ்வே வருங்காலத்தில் செண்பகராமனின் வாழ்வை முடிக்க காரணமாக இருந்ததது.

   தமிழன் எப்பொழுதும் துரோகத்தாலும்வஞ்சகத்தாலும் மட்டுமேவீழ்த்த படுகிறான்அதே போலதான் செண்பக ராமனும்வீழ்த்தப்பட்டார்தனது தலைவர் இவரிடம் தோற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாத ஹிட்லரின் நாஜிக்கள்செண்பகராமனின் உணவில்நயவஞ்சகமாய் விஷத்தை கலந்தனர்அந்த விஷம் அவரை மெல்லமெல்ல நோயாளியாக்கி  வீழ்த்தியதுபல மேதகு சிறப்புகள் உடையசெண்பக ராமன் 1936 ம் ஆண்டு மே 26 ந் தேதி உயிரிழந்தார்.இப்படிப்பட்ட மாவீரனை நமது அரசாங்கம் 2009 ம் ஆண்டு தான் சிலைநிறுவி அடையாள படுத்தியதுநமது வரலாறே நமது முகவரி ஆதலால்வரலாற்றை காப்போம் அதன் நாயகர்களை போற்றுவோம்.

Comments

Popular posts from this blog

தஞ்சாவூர் சிறப்பு

கல்லணை சிறப்பு

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்..