மறைக்கப்பட்ட மறுபக்கம் - 1

Image result for earth images
உலகின் தோற்றம் : 
இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதே அறிவியலுக்கு சவாலான ஒன்று. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பரிபாடலில் கருவளர் "வானத்திசையிற் தோன்றி உருவறிவாரா ஒன்றன் ஊழியும் உந்து வளி கிளர்ந்த உளமுழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும் பணியொடு தன்பெயல் தலை இய ஊழியும் அவையிற் நுண்முறை வெள்ள முழ்கியர் தருபு உள்ளிபிகிய இருநிலத் தூழியும்". இங்கு "வானத்தில் இருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரில் இருந்து நிலமும்" தோன்றியதாக கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் சூரியனில் இருந்து பிரிந்த பூமியானது நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்ததாகவும் பின் காலப் போக்கில் பனிப்படலமாக மாறி பின்னர் நிலப்பகுதி தோன்றியதாகவும் பல அறிவியல் உண்மைகள் தெளிவு படுத்துகின்றன.அனால் தொழில்நுட்பமே இல்லாத அன்றைய தமிழரின் அறிவும், திறனும் வியப்பிற்குரியது. கடல் நீர் ஆவியாகி மேகமாக மாறி பின்னர் அது மழையாக மாறும் என்பது அறிவியலின் ஒரு நாள் ஆய்வின் முடிவல்ல. ஆனால் பரிபாடலில் " நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்தளும்பும் தன் பொறை தவிர்பு அசைவிட" என்று, முகில்கள் கடலின்கண் நீரை முகந்து கொண்டு வந்து ஊழி முடிவின்கண் முழுகுவிக்க முயன்றது போல் மழை பெய்ததாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இன்றைய ஆய்வின் முடிவுகள் அல்ல அன்றைய அறிவுத் தமிழரின் தனித்திறமைகள்.

Comments

Popular posts from this blog

தஞ்சாவூர் சிறப்பு

கல்லணை சிறப்பு

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்..