மறைக்கப்பட்ட மறுபக்கம் - 2
மருத்துவ அறிவியல் :
மனிதனை காக்க, மரணத்தின் விளிம்பு வரை செல்கிறது தற்போதைய மருத்துவம். உயிரின் புதிய மாதிரிகளை உருவாக்க குளோனிங் உள்ளது. ஆனால் தற்பொழுதுள்ள தொழில்நுட்ப வசதிகள் ஏதும் இல்லாத அந்த காலத்திலேயே சித்தர்களும், தலைசிறந்த வைத்தியர்களும் இருந்ததை அவர்களின் இலக்கியங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. "மாதா உதிரம் மலமிகில் மந்தனாம் மாதா உதிரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை மாதா உதிரத்தில் வைத்த குழவிக்கே" (திருமந்திரம்) என்ற திருமூலர் பாடலில், தாயின் உதிரத்தில் மலம் மிகுந்தால் பிறக்கும் குழந்தைக்கு மந்த புத்தியம், நீர் மிகுந்தால் ஊமையாகவும், மலம் மற்றும் நீர் இரண்டும் மிகுதியானால் கண் பார்வை அற்றும் இருக்கும் என கூறியுள்ளார். இதனை இன்றைய மருத்துவரின் ஆலோசனைகளும் உறுதிப்படுத்துகின்றன.
மாற்றுருப்பு பொருத்துதல் :
இன்றைய மருத்துவத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. "நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன் ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் " (சிலப்பதிகாரம்) கீரந்தையின் இலக்கக் கதவைத் தான் தட்டியதற்கு தண்டனையாக தன் கையை தானே துண்டித்து கொள்கிறான் பாண்டிய மன்னன். பிறகு பொன்னால் செய்யப்பட்ட கை வைத்துக்கொண்டான். அன்று முதல் பொற்கை பாண்டியன் என அழைக்கப்பட்டான்.
அதே போன்று கண் பார்வை அற்றவர்களுக்கு பிறருடைய கண்ணினை வைத்து பார்வை பெறவைக்கும் மருத்துவத்தை மிக எளிதாக கண்ணப்பர் கதையின் வாயிலாக சேக்கிழார் கூறியுள்ளார்.
மனிதனை காக்க, மரணத்தின் விளிம்பு வரை செல்கிறது தற்போதைய மருத்துவம். உயிரின் புதிய மாதிரிகளை உருவாக்க குளோனிங் உள்ளது. ஆனால் தற்பொழுதுள்ள தொழில்நுட்ப வசதிகள் ஏதும் இல்லாத அந்த காலத்திலேயே சித்தர்களும், தலைசிறந்த வைத்தியர்களும் இருந்ததை அவர்களின் இலக்கியங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. "மாதா உதிரம் மலமிகில் மந்தனாம் மாதா உதிரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை மாதா உதிரத்தில் வைத்த குழவிக்கே" (திருமந்திரம்) என்ற திருமூலர் பாடலில், தாயின் உதிரத்தில் மலம் மிகுந்தால் பிறக்கும் குழந்தைக்கு மந்த புத்தியம், நீர் மிகுந்தால் ஊமையாகவும், மலம் மற்றும் நீர் இரண்டும் மிகுதியானால் கண் பார்வை அற்றும் இருக்கும் என கூறியுள்ளார். இதனை இன்றைய மருத்துவரின் ஆலோசனைகளும் உறுதிப்படுத்துகின்றன.
மாற்றுருப்பு பொருத்துதல் :
இன்றைய மருத்துவத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. "நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன் ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் " (சிலப்பதிகாரம்) கீரந்தையின் இலக்கக் கதவைத் தான் தட்டியதற்கு தண்டனையாக தன் கையை தானே துண்டித்து கொள்கிறான் பாண்டிய மன்னன். பிறகு பொன்னால் செய்யப்பட்ட கை வைத்துக்கொண்டான். அன்று முதல் பொற்கை பாண்டியன் என அழைக்கப்பட்டான்.
அதே போன்று கண் பார்வை அற்றவர்களுக்கு பிறருடைய கண்ணினை வைத்து பார்வை பெறவைக்கும் மருத்துவத்தை மிக எளிதாக கண்ணப்பர் கதையின் வாயிலாக சேக்கிழார் கூறியுள்ளார்.
Comments
Post a Comment