Posts

Showing posts from May, 2018

பெர்முடா முக்கோணத்தின் ரகசியம்

Image
உலகில் விலகாத விடைகிடைகாத மர்மங்களும், மர்மமுடிசுகளும், ஏராளம் இருகின்றன. அவற்றில் பல, கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கிய சூரனாக திகழ்ந்த மர்மம் தான்பெர்முடா முக்கோணம். மியாமி, பெர்முடா தீவு மற்றும் புய்ரடோ ரிகாவுக்கு இடையே அமைந்துள்ள மிகப்பெரிய கடல்பரப்புதான் பெர்முடா முக்கோணம்.    இங்கு என்ன நடக்கிறது ஏது நடக்கிறது எதனால் இதை கடலில் கடக்கும் கப்பல்கள், வானத்தில் கடக்கும் விமானங்கள் உள்வாங்கி மறைகின்றன என்பது பெரும் மர்மமாக விளங்கி வந்தது அதற்கான பதிலைத்தான் அறிவியல் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெர்முடா முக்கோணத்தில் மேல் இருக்கும் மேகங்கள்தான் அங்கு நடக்கும் மர்மமான நிகழ்வுகளுக்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவற்றை கிள்ளர் க்லவுட்ஸ் என்றும் கூறுகின்றனர்.    பெருமுடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள் அருங்கோணா வடிவில்அமைந்திருக்கின்றன. மேலும் இங்கு காற்று மணிக்கு 170 மைல் வேகத்தில் பயணிக்கிறது என்கின்றனர். இதன் காரணத்தால்தான் பெர்முடா முக்கோணப்பகுதி...

டெல்லி சாலையில் வலம் வந்த அமெரிக்க கார்

Image
அமெரிக்காவின் ஒவ்வொரு செயலையும் பார்த்து "பட்டிக்காட்டான் மிட்டாயைப் பார்ப்பது" போன்ற நிலைக்கு உலக மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். அந்த வரிசையில், அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் கார் குறித்த ஒரு "வேடிக்கை வினோத" தகவல் தொகுப்பு இது. பீஸ்ட் - இதுதான் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான ஆடம்பரமான, உலகின் அதி நவீன காரின் செல்லப் பெயர். இந்தக் கார் சில நாட்களுக்கு முன் டெல்லிக்கு வந்தது. ஒபாமா குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது இந்தக் காரில்தான் அவர் விழா நடந்த இடத்திற்கு வந்தார்.  லிமோசின் வகை காரான இதில் இல்லாத வசதியே இல்லையாம். வாங்க காரைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். சாதா கார்தான்.. ஆனால் அசாதாரணமான வசதிகளுடன் இது சாதாரண கார்தான். ஆனால் பல அசாதாரணமான வசதிகள் இதில் நிரம்பியுள்ளன.  அதன் சேசிஸ், டீசல் என்ஜின், டிரான்ஸ்மிஷன் ஆகியவை செவர்லே கோடியாக் காரில் உள்ளது போலவே இருக்கும். இதன் ஹெல்லைட், பின்னால் உள்ள லைட்டுகள் ஆகியவற்றைப் பார்த்தால் கேடிலாக் கார் போலவே தோற்றம் தரும். காரைச் சுமக்க தனி விமானம் இந்தக் காரை பல்வேறு நாடுகளுக்கும்...

தஞ்சாவூர் சிறப்பு

தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியம் ஆகும். தமிழகத்தில் நெல் உற்பத்தியில் தஞ்சாவூர் முதலிடம் வகிக்கிறது. பெயர்க்காரணம் : பெயர் வரக் காரணமாக சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களை துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்று பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்ரஹாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவ சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீஸ்வரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது. சிறப்புகள் :  தஞ்சாவூர் மாவட்டம் விவசாயத்திற்கு பெயர் பெற்றதாகும். காவிரி நதியால் நெற்பயிர்களும், தென்னை மரங்களும், மாந்தோப்புகளும் செழித்து வளர்கின்றன. தஞ்சாவூரின் ஆண்டு நெல் உற்பத்தி 1991-92ம் ஆ...

தஞ்சாவூர் பெரிய கோவில்

உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்; தஞ்சைப் பெரிய கோவில் ஒரு உலக அதிசயம் என்று; பலமுறை படித்திருப்பிர்கள்.. ஆயினும் இதில்,  பல நூல்களில் உள்ள சுவையான புள்ளி விவரங்களைத் தொகுத்துக் கொடுக்கிறேன். தஞ்சாவூர் பெரியகோவிலில் ஐந்து அதிசயங்கள் உள்ளன: 1.வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்! 2.பெரிய சிவலிங்கம்; சிவலிங்கம் என்பதன் பொருள் கடவுள் உருவமற்றவர் என்பதாகும். 13 அடி உயரம்! 3.கர்ப்பகிரகத்துக்கு நேராக மிகப் பெரிய நந்தி; சிவபெருமானின் வாஹனம்; 12 அடி உயரம். எடை 12 டன்! 4.கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம். அங்குள்ள கல்லின் எடை 81 டன்! 5.இறுதியாக ஆயிரம் ஆண்டு பழமையான அற்புத ஓவியங்கள். பெரிய கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி – இவை அனைத்தும் இக்கோவிலைக் கட்டிய சோழ மாமன்னன் ராஜ ராஜ சோழனின் (கி.பி. 985-1014) பெரிய/ உயர்ந்த சிந்தனையைக் காட்டுகின்றன. நாமும்தான் எதைப் பற்றி எல்லாமோ பெரிய கற்பனை செய்கிறோம்; நடக்கிறத...

கல்லணை சிறப்பு

Image
கல்லணை   இந்தியாவின்   தமிழ்நாட்டில்  உள்ள உலக பழமை வாய்ந்த  அணையாகும் . இது  காவிரி  மீது கட்டப்பட்டுள்ளது. இது  திருச்சிக்கு  மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும்  காவிரி ஆறு   முக்கொம்பில்  வடபுறமாக  கொள்ளிடம் ,தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது.இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு, என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு(கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு  பிரியுமிடத்தில்  கல்லணை கட்டப்பட்டுள்ளது. பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும்  கொள்ளிடம்  ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில்...

தாஜ்மஹாலைப் பற்றிய அறியாத உண்மைகள்!

Image
உலகில் தாஜ் மஹாலை விரும்பாதவர்கள் என்று ஒருவர் கூட இருக்க மாட்டோம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பப்படும் ஒரு வரலாற்று சின்னம் மற்றும் காதலின் சுவாசம் பேசும் காதலர்களின் கோவில் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வாறான தாஜ்மஹாலை விரும்பும் நமக்கெல்லாம் தாஜ்மஹால் சாஜஹானால் கட்டப்பட்டது என்றுதான் தெரியும். மாறாக அதனை கட்டிய சாஜஹானின் பின்னனி உங்களுக்கு தெரியுமா?. அந்த வகையில் தாஜ்மஹால் பற்றிய சில சுவாரஷ்யமான தகவல்கள். இந்தியாவின் ஆக்ரா இராச்சியத்தின் மிகப்பெரிய சக்கரவர்த்தி அக்பரின் வழியில் வந்த மாபெரும் சக்கரவர்த்தி சாஜஹான். கி.பி 1628 தொடக்கம் 1658 ஆம் ஆண்டு வரை ஆக்ரா இராட்சியத்தின் மாபெரும் மன்னனாக ஆட்சி செய்த சாஜஹான் தனது வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை கட்டடக்கலைக்கே செலவிட்டார். மிகுந்த திறமைசாலியாக காணப்பட்ட சாஜஹானின் முதல் மனைவி மும்தாஜ் அல்ல சாஜஹானின் மூன்றாவது மனைவிதான் மும்தாஜ். அதேபோன்று மும்தாஜின் நான்காவது கனவன்தான் சாஜஹான். தனது அரண்மனையில் பணிப் பெண்ணாக பணிபுரிந்த மும்தாஜை விரும்பி திருமணம் செய்துக்கொண்டார் சாஜஹான். மும்தாஜ் இறந்தது அவளது 16 ...

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்..

Image
நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரை பற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (கீழ படிக்கவும்) திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வ...

மீண்டும் ஆள வருகிறது தமிழனின் வீரம்

Image
தமிழர்களின் வீரத்தினை உலகுக்கு எடுத்துக்காட்டும் வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. இந்த விளையாட்டினை பார்ப்பதற்காக இந்தியாவின் வெளி மாநிலத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் படையெடுத்து வருவார்கள். ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டு அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பாராம்பரிய வீர விளையாட்டின் வரலாற்றை பற்றி பல தகவல்கள் வெளிவந்தாலும், வரலாற்றை மாற்றி அமைக்கும் விதமாக தமிழர்கள் அதில் பல மாற்றங்களை புரிந்துவருகின்றனர். ஜல்லிக்கட்டு வரலாறு 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு குறித்து கலித்தொகையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது, ஆயர் குலத்தவர்களே ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடக செம்மைப்படுத்தியுள்ளனர். முல்லை நிலத்தில் வளமான புல்லுண்டு. அதனை வயிறார மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும், காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள்...

தமிழனின் மறந்த வீரமும் மறைந்த வரலாறும்

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற ...

அம்புலன்சின் பிறப்பு

Image
 1809-ல் பிரெஞ்சுக்காரர்கள் போர்க்களத்தில் காயமடைந்த போர்வீரர்களைக் குணப்படுத்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நடக்க முடிந்தவர்கள் அல்லது ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செ ல்ல க்கூடியவர்களைப் போர்களத்துக்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து உடனடியாகச் சிகிச்சை அளித்தனர்.     பிரெஞ்சு மொழியில், நடப்பது என்பதற்கான சொல் ' ஆம்புலேர் ' ( ambulare ). அதற்கு இணையான ஆங்கிலச் சொல்  amle , 1242-ல், ' உதவி வேண்டுவோருக்கான புகலிடம் ' என்ற பொருளில் ' ஹாஸ்பிடல் ' என்ற சொல் வழங்கி வந்தது. ' ஆம்புலன்ஸ் ' என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பு ' உதவி வேண்டுவோர் நடந்தோ, சுமக்கப்பட்டோ சென்றடையும் இடம் ' என்பதாகும். 19-ம் நூற்றண்டின் இடைக்காலத்தில் கிரிமியாவில் நடைபெற்ற போரில் குதிரைகளால் இழுக்கப்பட்ட வாகனங்களில், காயமடைந்த போர்வீரர்களை முதமுறையாக மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றனர். அந்த வாகனங்கள் ' ஆம்புலன்ஸ் ' என்று அழைக்கப்பட்டன.    1600-1613-ம் ஆண்டுகளில் கனடாவின் அகேடியாவில் போர்ட் ராயல் துறைமுகத்தில் 'சிக் பே' (Sick bay) என்ற முதல் மருத்துவமனை...

மறைக்கப்பட்ட மறுபக்கம் - 2

மருத்துவ அறிவியல் :   மனிதனை காக்க, மரணத்தின் விளிம்பு வரை செல்கிறது தற்போதைய மருத்துவம். உயிரின் புதிய மாதிரிகளை உருவாக்க குளோனிங் உள்ளது.  ஆனால்  தற்பொழுதுள்ள தொழில்நுட்ப வசதிகள் ஏதும் இல்லாத அந்த காலத்திலேயே சித்தர்களும், தலைசிறந்த வைத்தியர்களும் இருந்ததை அவர்களின் இலக்கியங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. " மாதா உதிரம் மலமிகில் மந்தனாம் மாதா உதிரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை மாதா உதிரத்தில் வைத்த குழவிக்கே"  (திருமந்திரம்)  என்ற  திருமூலர் பாடலில், தாயின் உதிரத்தில் மலம் மிகுந்தால் பிறக்கும் குழந்தைக்கு மந்த புத்தியம், நீர் மிகுந்தால் ஊமையாகவும், மலம்  மற்றும்  நீர் இரண்டும் மிகுதியானால் கண் பார்வை அற்றும் இருக்கும் என கூறியுள்ளார். இதனை இன்றைய மருத்துவரின் ஆலோசனைகளும் உறுதிப்படுத்துகின்றன.  மாற்றுருப்பு பொருத்துதல் :  இன்றைய மருத்துவத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. "நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன் ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த பொற்கை நறுந்தார்ப் ப...

மறைக்கப்பட்ட மறுபக்கம் - 1

Image
உலகின் தோற்றம் :  இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது என்பதே அறிவியலுக்கு சவாலான ஒன்று.  ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பரிபாடலில் கருவளர் "வானத்திசையிற் தோன்றி உருவறிவாரா ஒன்றன் ஊழியும் உந்து வளி கிளர்ந்த உளமுழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும் பணியொடு தன்பெயல் தலை இய ஊழியும் அவையிற் நுண்முறை வெள்ள முழ்கியர் தருபு உள்ளிபிகிய இருநிலத் தூழியும்".  இங்கு "வானத்தில் இருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரில் இருந்து நிலமும்" தோன்றியதாக கூறப்பட்டுள்ளது.  இது மட்டுமல்லாமல் சூரியனில் இருந்து பிரிந்த பூமியானது நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்ததாகவும் பின் காலப் போக்கில் பனிப்படலமாக மாறி பின்னர் நிலப்பகுதி தோன்றியதாகவும் பல அறிவியல் உண்மைகள் தெளிவு படுத்துகின்றன. அனால் தொழில்நுட்பமே இல்லாத அன்றைய தமிழரின் அறிவும், திறனும் வியப்பிற்குரியது.  கடல் நீர் ஆவியாகி மேகமாக மாறி பின்னர் அது மழையாக மாறும் என்பது அறிவியலின் ஒரு நாள் ஆய்வின் முடிவல்ல.  ஆனால் பரிபாடலில் " நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்தளும்பும் தன் பொறை தவிர்பு அசைவிட" ...